கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளில் தலைவர்கள்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளிலும், நிவாரண உதவி வழங்கும் நிகழ்விலும் நமது தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் சக்தி நகர செயலாளர் திரு.புவுல்ராஜ் அவர்கள் 25 குடும்பங்களுக்குத் தேவையான மளிகைப்பொருட்களை வழங்கினார்.
கரூர் மாவட்டம் ஈசநத்தம் ஊ.ம.தலைவர் திரு.ராமசாமி அவர்கள் தன் சொந்த செலவில் தூய்மைக் காவலர்கள் 26 பேருக்கு 25 கிலோ அரிசி மூட்டை வழங்கினார்.
ஊ.ம.தலைவர்கள் ஈரோடு மாவட்டம் உக்கரம் - திரு.முருகேசன் அவர்களும் திண்டுக்கல் மாவட்டம் நூத்தலாபுரம் திரு.செல்வராஜ் ஆகியோர் நோய் தடுப்புப்பணியிலும், தூய்மைப்பணியிலும் ஈடுபட்டனர்.