கொரோனா நோய் தடுப்பு பணியில் நம் ஊராட்சிமன்றத் தலைவர்கள்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்பரவலை தடுக்கும் பணியில் நமது பஞ்சாயத்து தலைவர்கள் ஈடுபட்டனர். தலைவர்கள் தங்கள் பகுதியில் முழுவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், கரூர் மாவட்டம், ஈசநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.M.N.ராமசாமி, ஈரோடு மாவட்டம் உக்கரம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.முருகேசன், திண்டுக்கல் மாவட்டம், சீத்தாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.செல்வராஜ் ஆகியோர் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். (மேலும் இத்தலைவர்கள் பற்றி அறிய நீலநிறத்தில் உள்ள அவர்களின் பெயர் மீது விரல் வைக்கவும்).