🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாண்புமிகு துணை முதல்வருடன்- ஜமீன்தார் திடீர் சந்திப்பு.

மாண்புமிகு துணைமுதல்வருடன்- ஜமீன்தார் சந்திப்பு. பொள்ளாச்சி, இராமபட்டணம் ஜமீன்தார் திரு.விஷ்ணு காந்த சக்திவேல் ராஜா அவர்கள் தமிழக துணை முதல்வர் மாண்புமிகு .திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களை தேனியில் சந்தித்தார். 


முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தேனி சென்ற ஜமீன்தார் அவர்கள் அங்கு பிஜேபி-யின் முக்கிய தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களை சந்தித்தார். திடீர் ஏற்பாடாக துணை முதல்வரை சந்திக்க சென்ற பொழுது, துணை முதல்வருக்கு மரியாதை நிமித்தமாக ஜமீன்தார் சால்வை அணிவிக்க விரும்பினார்.


ஆனால் அதை ஏற்க மறுத்த துணைமுதல்வர் ஜமீன்தார் எனக்கு சால்வை அணிவிக்க கூடாது, நான் ஜமீன்தாருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்கிறேன் என்று ஜமீன்தார் திரு.விஷ்ணு காந்த சக்திவேல் ராஜா அவர்களுக்கு சால்வை அணிவித்தார். 


துணைமுதல்வரின் இப்பணிவும், எளிமையும் அங்கிருந்த தலைவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. சந்திப்பின் பொழுது தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஓ.பி.ரவீந்திரநாத் உடனிருந்து வரவேற்றார்.


நிகழ்வின்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பார்வைக்காக.

தகவல் உதவி: திரு.கே.டி.மோகன்ராஜ்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved