🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாட்டிய மங்கை செல்வி.ஹர்ஷிதா சாய்-இன் சலங்கை பூஜை கோலாகலம்!

சென்னை அருகேயுள்ள பேரூரில் வசித்து வருபவர்கள் தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்ட திரு.செல்வக்குமார் - திருமதி.பால தனலட்சுமி தம்பதியினர். திரு.செல்வக்குமார் அவர்கள் எல்&டி நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக உள்ளார். இவர்களின் அன்புமகள் எஸ்.பி.ஹர்ஷிதா சாய்  புகழ்பெற்ற தி ஸ்ராம் அகாடமியில் 7-வது படித்து வருகிறார். ஹர்ஷிதாசாய் கடந்த ஐந்தாண்டுகளாக போரூரிலுள்ள ஸ்ரீ ஹயக்கிரீவர் ஆர்ட்ஸ் & கல்ச்சுரல்  நாட்டியப்பள்ளியில் ஆசிரியர் திருமதி.ஆர்.எஸ்.அபிநய ஸ்ரீ அவர்களிடம் பரதநாட்டியம் பயின்றுவருகிறார். செல்வி.எஸ்.பி.ஹர்ஷிதா சாய் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும்விழா தொடக்க நிகழ்வில் பரதநாட்டியம் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், செல்வி.ஹர்ஷிதா சாயின் சலங்கை பூஜை நிகழ்வு சென்னை அண்ணாசாலையிலுள்ள புகழ்பெற்ற ராணிசீதை அரங்கில் நேற்று (15.09.2023) மாலை நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக திரைப்பட நடிகை கலைமாமணி திருமதி.நளினி பங்கேற்று மாணவிகளை வாழ்த்தினார். மேலும் இந்த நிகழ்வில் சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், மண்டல பொறுப்பாளர் ஆறுமுகசாமி, ஜெயகிருஷ்ணன், மாப்பிள்ளை துரை, கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு செல்வி.ஹர்ஷிதா சாய்-க்கு பரிசு வழங்கி வாழ்த்தினர்.  


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved