🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உலகம் ஏன் யூதர்களை வெறுக்கிறது? - ஜெர்மனி மீது அல்லாவா கோபம் கொள்ளவேண்டும்.

உலகம் ஏன் யூதர்களை வெறுத்தது?

யூதர்களைக் கண்டு ஐரோப்பாவே வெறுப்படைந்த காலம் ஒன்று.  எப்படி அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது என்பதில் ஒவ்வொரு நாடும் பெரும் ஆலோசனைகளில் ஈடுபட்டது,  புதிய புதிய திட்டங்களை வகுத்தது. இப்படி வெளியேற்றப்பட்ட யூதர்களை, பாலஸ்தீனியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள். அங்கு சென்று கால்பதித்து மெல்ல மெல்ல அவர்களின் நிலங்களை அபகரித்து இன்றைக்கு பாலஸ்தீனர்கள் 10%த்திற்கு குறைவான நிலத்தில் வசித்து தங்களின் தாய்நாட்டை இழந்து நிற்கதியாய் இருக்கிறார்கள். யூதர்களை அங்கே சென்று இறக்கி விட்டு விட்டு மெல்ல இந்த விசயத்தில் தங்களின் கைகளை கழுவிக்கொண்டது இங்கிலாந்து. இனி இது எங்கள் பிரச்சனை இல்லை ஐநா பார்த்துக்கொள்ளட்டும் என விலகிக் கொண்டார்கள்.

அப்படி பாலஸ்தீனத்தில் இவர்கள் வந்திருக்காவிட்டால், வேறு என்ன திட்டங்கள் எல்லாம் இந்த உலக நாடுகள் அவர்களுக்காக வைத்திருந்தார்கள் என்பதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

1.யூதர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என 1825-ல் அமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள அரசியல்வாதியும் கதாசிரியருமான மோர்டியாக் மேனுவேல் நோஹ் 27 சதுர மைல் பரப்பளவு கொண்ட ஒரு தீவை வாங்கினார். எறாரத்  (ARARAT- City of Refuge) என அந்தத் தீவிற்கு பெயர்சூட்டினார். இதனை அவர் யூதர்களுக்கான தாய்நாடாக மாற்றத் திட்டமிட்டார். அந்தத் தீவில் ஒரு பெரும் கல்வெட்டையும் நிறுவினார், அமெரிக்கா சுதந்திரம் பெற்ற 50வது ஆண்டில் இதை ஒரு சாதனையாக அறிவிக்க அவர் முனைந்தார். ஆனால் இந்த யோசனையை யாரும் செவிமடுக்கவில்லை என்பதால் திட்டத்தைக் கைவிட்டார், ஆனால் அவர் நிறுவிய கல்வெட்டு இன்றைக்கும் அங்கே உள்ளது.

2.பிரித்தானிய எழுத்தாளர் ஜோசப் சாம்பேர்லென் (Joseph Chamberlain)அவர்களின் காணியாகத் திகழ்ந்த கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியை யூதர்களுக்கான தாயகமாக மாற்றத் திட்டமிட்டார். இந்தத் திட்டத்தை அவர் 1903-ல் பேசலில் நடைபெற்ற ஆறாவது சர்வதேச யூதர்கள் மாநாட்டில் அறிவித்தார். ஐரோப்பா முழுவதும் யூதர்களுக்கு எதிராக பெருகி  வரும் எதிர்ப்பலைகளை சுட்டிக்காட்டி இதிலிருந்து தப்பிக்க விரைவில் ஒரு பாதுகாப்பான  இடத்தை நாம் தேர்வு செய்தாக வேண்டும் என அவர் வற்புறுத்தினார். இதனை தியோடர் ஹெர்சலே ஒரு தற்காலிகத் தீர்வாக ஒப்புக்கொண்டார், பிரிட்டன்  உகாண்டாவில் 5000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஒதுக்கவும் ஒப்புக் கொண்டது. 1904-ல் ஒரு பெரும் குழு இதனை ஆய்வு செய்ய அங்கே பயணித்தது. ஆனால் 1905-ல் ஆப்பிரிக்காவில் ஒரு தாயகத்தை ஏற்படுத்துவது முதல் மாநாட்டின் தீர்மானங்களில் இல்லை என்பதால் இதனை ஏற்க இயலாது என பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. 

3. யூதர்களின் எண்ணிக்கை படு வேகமாக வளர்ந்துவருவதை ரஷ்யா ஒரு நெருக்கடியாகப் பார்த்தது, அதனால் இதனைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு என்று ஒரு தனித்த நிலப்பகுதியை ஏற்படுத்த அவர்கள் முடிவு செய்தனர். ரஷ்யா அங்கே சுயாட்சியுடன் கூடிய ஒரு சோசலிச வாழ்க்கையை அளிக்கலாம் என்றும், ஆனால் தேசிய அளவில் அவர்கள் ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே இருப்பார்கள் என்றும் அறிவித்தது. கிழக்கு ரஷ்யாவில் சீனாவில் எல்லை அருகில் அவர்களுக்கு ஒரு நிலப்பரப்பையும் அவர்கள் ஒதுக்கினார்கள். இதுதான் பிரோபித்சான் (Birobidzhan) பகுதி, கடும் குளிர் பிரதேசமாக இந்தப் பகுதி இருந்தது, அங்கே யூதர்கள் மெல்ல மெல்ல குடியேறினார்கள், ஒரு கட்டத்தில் அந்தப் பகுதியில் 16% பேர் யூதர்களாக வசித்தார்கள், ஆனால் தட்பவெப்பமும் காலமும் ஒத்துழைக்காததால் மெல்ல மெல்ல அங்கிருந்து பல ஊர்களுக்கு இடம்பெயர்ந்தார்கள். 

4.  1934-ல் ஜப்பான் மன்னர் ஒரு திட்டத்தை அறிவித்தார், இதற்கு புகு திட்டம்  (Fugu plan) என பெயர் சூட்டினார். யூதர்களை ஜப்பானில் குடியேற்றம் செய்தால் தன் வழியே ஜப்பானிற்கு பொருளாதார ரீதியில் பல நன்மைகள் ஏற்படும் என அவர் நம்பினார். 6 லட்சம் பேரை குடியேற்றம் செய்யும் அளவிற்கு அவர்கள் பெரும் திட்டங்களை வகுத்தார்கள், ஆனால் யூதர்கள் ஆபத்தானவரக்ள் என்கிற பயம் ஜப்பானியர்கள் மத்தியில் கடுமையாக இருந்தது. யூதர்கள் அமெரிக்காவிற்கு ஆதரவாகவே நிற்பார்கள், அது ஜப்பானுக்கு ஆபத்தாகவே முடியும் என்று அரசியல் நிபுனர்கள் தெரிவிக்க இந்தத் திட்டத்தை கைவிட்டார்கள்.

5. 1940 ஜூன் மாதம் ஜெர்மானியர்கள் ஒரு திட்டத்தைத் தீட்டினார்கள், அதாவது ஐரோப்பா முழுவதிலும் உள்ள யூதர்களை அங்கிருந்து அப்படியே வெளியேற்றி, அவர்களை ஆப்பிரிக்கா அருகில் இருக்கும் மடகாஸ்கர் தீவில் குடியமற்றுவது என்பது தான் அந்தத் திட்டம். பிரான்ஸ் நாட்டை ஜெர்மனி கைப்பற்றிய நிலையில் பிரான்ஸ் வசம் இருந்த இந்தத் தீவை அப்படியே இந்தத் திட்டத்திற்கு பாவிப்பது என முடிவு செய்தார்கள். அடுத்து பிரிட்டனை வென்று விட்டதும் யூதர்களை ஐரோப்பாவில் இருந்து வெளியேற்ற பிரிட்டனிடம் உள்ள பெரிய கப்பல்களை பாவிப்பது  என்றும் தீர்மானித்தார்கள். ஒரு வருடத்திற்கு பத்து லட்சம் யூதர்கள் என்கிற கணக்கில் நான்கு வருடங்களில் ஐரோப்பாவில் யூதர்களே இல்லாமல் பார்த்துக் கொள்வது என்பதும் அவர்களின் முழு இலக்கு. ஆனால் போரில் பிரிட்டனை ஜெர்மானியர்கள் வீழ்த்த முடியவில்லை என்பதால் இந்தத் திட்டத்தை கைவிட்டார்கள்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் ஏன் இத்தனை நாடுகள் யூதர்களை கண்டு இப்படி எல்லாம் யோசிக்க வேண்டம்?? யூதர்கள் எதுவும் செய்யாத அப்பாவிகளா அல்லது அவர்களின் செயல்கள் தான் இப்படியான விளைவுகளை ஏற்படுத்தியதா? 

யூதர்களின் கப்பல் பாலஸ்தீன துறைமுகத்தை நெருங்கி போது அதில் இருந்தவர்கள் ஒரு பெரும் பதாகையை ஏந்தி வந்தார்கள் “"The Germans destroyed our families and homes - don't you destroy our hopes" அதாவது ஜெர்மானியர்கள் எங்கள் குடும்பங்களை வீடுகளை அழித்துவிட்டார்கள், நீங்கள் எங்கள் நம்பிக்கையை அழித்துவிடாதீர்கள்” என்றது அந்த பதாகை. யூதர்கள் ஹிட்லரின் கொடுங்கோன்மையின் கீழ், ஹிட்லரின் ராணுவத்தின் பிடியில் சிக்கிச் சீரழிந்தது கண்டு உலகே கவலையுற்றது, ஹிட்லரைச் சாடியது, வரலாறு ஹிட்லரை ஒரு போது மன்னிக்காது. ஆனால் யூதர்கள் தங்களின் கோபத்தைத் தீர்க்க, தங்களின் வெறியைத் தீர்க்க படை திரட்டி ஜெர்மனியை அல்லவா துவசம் செய்ய வேண்டும். ஜெர்மனியில் வாங்கிய அடிக்கு பாலஸ்தீர்களின் மீது வெறியைத் தீர்ப்பது எந்த வகையில் நியாயம். பூங்கொத்து கொடுத்த மனிதர்களுக்கு பாஸ்பரஸ் குண்டுகளைப் பரிசாகக் கொடுக்கும் உங்களை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது.அப்படி ஒரு பதாகையை ஏந்தி வந்தவர்கள் இன்று பாலஸ்தீனர்களின் தாயகத்தை நிர்மூலமாக்கி வருகிறார்கள்.

  நன்றி: அ.முத்துகிருஷ்ணன்.
  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved