நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுடன் நலச்சங்க நிர்வாகிகள் சந்திப்பு!
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். இதன் விவரம் வருமாறு,
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களை இன்று (12.12.2023) காலை அவரது இல்லத்தில் சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், துணைச்செயலாளர் ஏ.முருகன், மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்துப்பேசினர். அப்போது துணைச்செயலாளர் முருகன் அவர்களை நலம் விசாரித்த அமைச்சர் சங்கத்தின் கோரிக்கைகளை அவரிடம் கேட்டறிந்தார். அடுத்த நிதியாண்டு துவக்கத்தில் மீண்டும் நினைவுபடுத்துமாறு முருகனிடம் அமைச்சர் கூறினார்.
இதனையடுத்து, அமைச்சர் மகனும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக அறியப்படுபவருமான கே.என்.அருண் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது சமூகநீதி கூட்டமைப்பின் செயல் தலைவர் பி.இராமராஜ், தெலுகு சம்மேளனத்தின் லட்சுமி நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.