🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தளி எத்துலப்ப நாயக்கரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

(16-02-2020) உடுமலை வட்டாரங்களில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தளி பாளையத்தை ஆண்ட ஒப்பாரும் மீப்பாரும் இல்லாத ராஜகம்பளத்து மாமன்னர். திருமூர்த்தி அணையை கட்டி செல்வ செழிப்புள்ள ஊரினை ஆண்டவர . உடுமலைப்பேட்டை முதல் பொள்ளாச்சி வரை திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் பெருவாரியான ஊர்கள் இவர் வசம் இருந்தது தான்.

காடுகளாக இருந்த உடுமலையினை விவசாய பூமியாக மாற்றிய பெருமை கொண்டவர். உடுமலைப் பேட்டை சுற்றுபுற ஊரில் உள்ளவர்கள் கம்பள மக்கள் அனைவரும் நேரடி வாரிசுகள். அவரை போற்றி அவரின் பெயரில் அமைப்பு வைத்து , சங்கம் வைத்து செயல்படுவது மிக மிக மகிழ்ச்சியான ஒன்று.

அவருக்கு பல பெயர்கள் வரலாற்றில் உண்டு. கொங்கு நாட்டு சிங்கம், தளி நாட்டு தளிர், என்று பல பெருமைகளை கொண்டவர். கொங்குநாடு பகுதியினை சிறப்பாக ஆட்சி செய்து இன்றும் அங்குள்ள பல சமூக மக்களால் புகழப்படும் வீரனை மறவாமல் இருப்போம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved