🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கோயம்பேட்டில் - மாமன்னர் திருமலை நாயக்கர் ஜெயந்தி

மாமன்னர் திருமலை நாயக்கரின் 437-வது ஜெயந்தி விழா மற்றும் தைப்பூச திருவிழா, சென்னை, கோயம்பேட்டில் 08.02.2020-சனிக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில்  பிரபல தொழிலதிபர்கள் , வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில், முக்கிய நிர்வாகிகள் விழாவில் கலந்துகொண்டு மாமன்னரின் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பித்தனர். விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவில் த.வீ.க.ப கழகத்தின் சார்பில். திரு. ஜெயராஜ், மாவட்ட தலைவர். திரு. கோபாலகிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளர். திரு. ஆனந்த பூபதி, மாவட்ட செயலாளர் மற்றும் திரு.N. பெருமாள், திரு.A. பெருமாள், திரு.A.பால்பாண்டி திரு.முத்துராமன் உள்ளிட்ட கோயம்பேடு பகுதி  பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

தகவல் உதவி: ஆசிரியர்.திரு.ஆனந்த பூபதி, சென்னை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved