இசைமகா சமுத்திரம் ஸ்ரீலஸ்ரீ.நல்லப்பசுவாமிகள் நினைவு ஸ்தூபியை 01.06.2020 அன்று திறக்கிறார் தமிழக முதல்வர்.
அன்புடையீர்,வணக்கம்.
கட்டாகத் திருநீறு பூசும் நெற்றி !
கனராகம் பிறழாமல் பாடும் கண்டம் !
மிட்டாதார் மிராசுகள்சூழ மைசூர் மன்னர்
மேன்மையுறப் பொன்னாடை போர்த்தும் தோள்கள்!
வட்டாரம் விளாத்திகுளம் நடக்கும் பாதம் !
வானவரும் கேட்கின்ற இசையின் நாதம்!
சிட்டான நல்லப்பசாமி பாதம்
சிரம்தாழ்த்தி வணங்கிடுவோம் ஞானி வாழ்க!
என பொற்கிளிக் கவிஞர்கள் வாழ்த்திய விளாத்திகுளம் ஶ்ரீலஶ்ரீ நல்லப்பசுவாமிகள்
அவர்களது நினைவு ஸ்தூபி திறப்புவிழா 01-06-2020 அன்று காலை 10மணியளவில் நடைபெற உள்ளது.
தமிழக முதல்வர் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். அவ்வமயம் நம் சொந்தங்கள் அனைவரும் அனைத்து கொரானா தடுப்பு சாதனங்கள் அணிந்து திரளாக கலந்துகொண்டு சிறப்பிப்போம்...
வாரீர்.. வாரீர்...
அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக்குழு பாஞ்சாலங்குறிச்சி.