🔴 LIVE | முப்பெரும் விழா 2023


டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்று வனக்காவலரானார் தங்கப்பாண்டி!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-4 தேர்வில் வெற்றிபெற்று வனக்காவலராக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார் கமுதி வட்டாரத்தைச் சேர்ந்த பி.தங்கப்பாண்டி. இதன் விவரம் பின்வருமாறு,

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கீழமுடி மன்னார் கோட்டை அருகேயுள்ள தோப்புநத்தம் கிராமத்தைச் சேர்ந்த திரு.கே.பூமிராஜ் - தெய்வத்திருமதி.சுப்புலட்சுமி தம்பதியினரின் மகன் பி.தங்கப்பாண்டி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்தாண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு அரசு வனத்துறையில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்.


எம்.எஸ்சி, பிடி பட்டாதாரியான பி.தங்கப்பாண்டி கல்லூரிப்படிப்பு முடித்து தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஐந்தாண்டுகளாக பணியாற்றிக்கொண்டே அரசுப்பணிக்கான தேர்வுக்குத் தயாராகிக்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் தேர்ச்சிபெற்ற பி.தங்கப்பாண்டிக்கு கடந்த ஜூன் 11-ஆம் தேதி வனக்காவலர் பதவிக்கான பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் வனக்காவலாராக தங்கப்பாண்டி பொறுப்பேற்றுக்கொண்டு பணியாற்றத் தொடங்கியுள்ளார்.

ஒருசில தோல்விகளைக்கண்டு சோர்ந்துவிடாமல் கடைமையாக முயன்று வெற்றிக்கோட்டை எட்டியுள்ள பி.தங்கப்பாண்டிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved