🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உலகின் 7-வது பெரிய கண்டமான அண்டார்டிகா இயற்கையின் அதிசயம்!

அண்டார்டிகா எனும் அதிசயம் !

உலகின் ஏழாவது கண்டமான அண்டார்டிகா பூமிப்பந்தின் தென்கோடியில் அமைந்துள்ளது. சூரிய வெப்பம் மிகக்குறைந்த அளவே வந்து  சேர்வதால் அண்டார்டிகா பனிக்கண்டம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். இது பனி உறைந்த நிலப்பரப்பு மட்டுமல்ல, பூமியின் மிகப்பெரிய நன்னீர் தேக்கமும் கூட. பூமியில் உள்ள மொத்த நன்னீரில் கிட்டத்தட்ட 70% அதன் பிரம்மாண்டமான பனிப்பாறைகளுக்குள் பூட்டப்பட்டுள்ளது. இந்த பனிப்பாறைகள் சில இடங்களில் 4 கிலோமீட்டருக்கும் அதிகமான தடிமன் கொண்டவை. ஏறத்தாழ 5000 மீட்டர் (16,000 அடி) அளவிற்குத் தரையில் ஆழ்துளையிட்டால் தான் மண்ணைப் பார்க்கமுடியும். மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பனிப்பொழிவு குவிந்து, இறுக்கமடைந்ததால் இந்த பனிக்கட்டிகள் உருவாகியுள்ளன. இவை, உலக கடல் மட்டத்தையும், காலநிலை அமைப்புகளையும் ஒழுங்குபடுத்துவதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கும் உறைந்த களஞ்சியமாக உள்ளன.

ஒரு துளி மழை கூடப் பெய்யாத இடம் எதுவென்ற வினா எழுப்பினால், அண்டார்டிகா என்று உடனே தயக்கம் எதுவுமின்றித் தாராளமாக விடையளிக்கலாம்.. உலகிலேயே கொடுமையான குளிரும் ( 89 டிகிரி ஷெல்சியஸ் ), பனிக்காற்றும் ( 1300 Km/Hr ) நிறைந்து, ஒரு உலக அதிசயமாகத் திகழும் அண்டார்டிகாவில், எந்தவித உயிரினங்களும் நிலையாக வாழ்வதுமில்லை. இங்குள்ள பனியின் அளவு மிக அதிகம் என்பதால், அதன் நிலைத்தன்மையில் ஏற்படும் சிறிய மாற்றங்களும் கூட மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த பனிப்பாறைகளின் குறிப்பிடத்தக்க பகுதிகள் உருகினால், உலக கடல் மட்டம் அபரிமிதமாக உயர்ந்து, உலகெங்கிலும் உள்ள கடலோர நகரங்களுக்கும், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அண்டார்டிகாவின் பனிப்பாறைகள், பனி அடுக்குககள் மற்றும் உறைந்த நிலப்பரப்புகள் கடந்த காலத்தின் காலநிலை பதிவாகவும், பூமியின் எதிர்காலத்திற்கான ஒரு முக்கிய குறியீடாகவும் செயல்படுவதால், விஞ்ஞானிகள் அதை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றனர். நமது கிரகத்தின் நன்னீர் சமநிலையைப் புரிந்துகொள்வதற்கும், பாதுகாப்பதற்கும் இது மிகவும் முக்கியமான பகுதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

பல நூற்றாண்டுகளாக அங்கே யாரும் பயணம் செய்தது இல்லை.அண்டார்டிகா குறித்து அறிந்திராத நாட்களிலேயே, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகள் உலகின் தென் துருவம் நோக்கிப் பயணிக்க முற்பட்டன. மனிதர்கள் வாழ சாத்தியமேயில்லை என்றாலும். வருடத்திற்கு ஆயிரம் முதல் ஐயாயிரம் பேர் வரை அங்கே அமைக்கப்பட்டுள்ள ஆய்வகங்களில் ஆராய்ச்சிக்காக தங்கி இருக்கிறார்கள்.இந்தியா கூட அங்கே தட்சின் கங்கோத்ரி, மற்றும் மைத்ரி எனும் இரு ஆய்வகங்களை அமைத்துள்ளது. பாரதி என்ற மூன்றாவது ஆய்வகத்தை சுமார் 140 கோடி செலவில் அமைக்க தற்போது முயற்சித்து வருகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved