மாவட்டத் துணைத்தலைவராக வழக்கறிஞர் வெற்றிவேல் நியமனம்!
விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி துணைத்தலவராக இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் விவரம் வருமாறு,
விருதுநகர் மாவட்டம் சந்திரகிரிபுரத்தைச் சேர்ந்தவர் எம்.கே.வெற்றிவேல். சட்டப்படிப்பு முடித்துள்ள வெற்றிவேல் பாரதிய ஜனதா கட்சியில் இருந்துவருகிறார். இந்நிலையில் வழக்கறிஞர் எம்.கே.வெற்றிவேல் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணியின் மாவட்டத் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை சமீபத்தில் அக்கட்சி வெளியிட்டுள்ளது.
பாஜக இளைஞரணி மாவட்டத் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம்.கே.வெற்றிவேல் பணி சிறக்க வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

