குரூப் தேர்வில் வெற்றிபெற்ற பொறியாளர்கள் பிரவின், கோகுல் ஆகியோருக்கு வாழ்த்துகள்!
கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த இராஜகம்பள சமுதாய உறவுகள், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் தேர்வுகளில் வெற்றி பெற்று, முறையே கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர் பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சமுதாயத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், கவுந்தப்பாடி அருகேயுள்ள சூராநாயக்கனூரைச் சேந்தத திரு.எர்ரநாயக்கர் - திருமதி.நஞ்சம்மாள் ஆகியோரின் மகனான இ.பிரவின்குமார், அமைப்பியல் (கட்டடவியல்) துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர். இவர் தமிழக அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய நில அளவையாளர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றிபெற்று வேலூர் மாவட்டத்தில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம், சின்னப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த திரு.முருகேசன் - திருமதி இராமாயம்மாள் ஆகியோரின் மகனான எம்.கோகுல், இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர், இவர் தமிழக அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய குரூப்4 தேர்வில் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலராகப் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்று தமிழக அரசில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ள பொறியாளர்கள் பிரவின்குமார், கோகுல் ஆகியோருக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

