தலைநகரில் இராஜகம்பளத்து இளைஞர்களின் அன்னதானம்!
பாஞ்சைப் பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 267-வது பிறந்தநாள் விழா இன்று (03.01.2026) மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் ப்ரியா ராஜன் மற்றும் துணைமேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தமிழக அமைச்சர் பெருமக்கள் மற்றும் தலைவர்கள், அதிகாரிகளை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் உள்லிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து சங்க ஒருங்கிணைப்பாளர் டி.சுப்பிரமணியன் ஒருங்கிணைப்பில் அயப்பாக்கம் டி.ஆறுமுகம், எஸ்.ராஜு, எஸ்.திருமுருகன், எம்.ஆனந்த், சி.மணி, சி. வெள்ளைப் பாண்டி, ஆர்.கதிரேசன் ஆகியோருடன் இராஜகம்பள சமுதாய இளைஞர்கள் இணைந்து அன்னதானம் செய்தனர். இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனையடுத்து அன்னதானக்குழுவிற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் பெருமாள், அமைப்புச்செயலாளர் ஆர்.சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

