🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காடிபட்டி ஊர்நாயக்கர் இயற்கை எய்தினார்!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலூகா திருக்கூர்ணம் - காடிபட்டி ஊர் நாயக்கர் ஆர். பழனிச்சாமி நாயக்கர் (81) அவர்கள் வயது மூப்பு காரணமாக நேற்று (07.01.2026) மாலை இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவுக்கு சமுதாயத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளரும், நிதி நிறுவன உரிமையாளருமான திரு.பி.சுப்பிரமணியம் அவர்களின் தந்தையாரும், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலூகா திருக்கூர்ணம் - காடிபட்டி ஊர் நாயக்கருமான திரு. ஆர். பழனிச்சாமி நாயக்கர் (81) அவர்கள் வயது மூப்பு காரணமாக நேற்று மாலை இயற்கை எய்தினார். அன்னாரின் நல்லடக்கம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அரவக்குறிச்சி அருகேயுள்ள காடிபட்டியில் நடைபெற இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

காடிபட்டி ஊர் நாயக்கரின் மறைவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் ஆர்.பெருமாள், சட்ட ஆலோசகர் எம்.பார்த்தசாரதி, மண்டலப்பொறுப்பாளர் எம்.டி.எஸ்.பாண்டியன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved