குடமுழுக்கு விழாவில் ஒன்றியக் கவுன்சிலர்-திருமதி.சுந்தரி கோவிந்தராஜ்
சிவகாசி ஒன்றியம், பிள்ளையார் நத்தம் திமுக - ஓன்றிய கவுன்சிலர் திருமதி.சுந்தரி கோவிந்தராஐ் அவர்கள், பிள்ளையார் நத்தம் காலனியில் நடைபெற்ற அருள்மிகு-காளியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், அங்கு நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்துகொண்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்.
முன்னதாக குடமுழுக்கு விழாவுக்கு வருகைபுரிந்த திருவில்லிபுத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் திரு.மல்லி கு.ஆறுமுகம் அவர்களை, ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.சுந்தரி கோவிந்தராஜ் அவர்களும், பொதுமக்களும் வரவேற்றனர். அதன்பின் அன்னதானத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய திருமதி.சுந்தரி கோவிந்தராஐ் அவர்கள் பணி சிறக்க வாழ்த்தினார்.