இடஒதுக்கீட்டை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக விடுதலைக்களம் கண்டன ஆர்ப்பாட்டம்
மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு வழங்கவேண்டிய 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு முறையாக வழங்காத காரணத்தால், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 10000-க்கும் அதிகமான இடங்களை பிறபடுத்தப்பட்ட சாதிகளிடமிருந்து தட்டிப்பறித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கெதிரான மத்திய அரசின் செயலைக்கண்டித்து விடுதலைக்களம் சார்பில் 21.06.2010-ஞாயிறன்று இணையவழி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி: திரு.கொ.நாகராஜன், நிறுவன தலைவர், விடுதலைக்களம்.