DNT - பிரிவினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்ககோரி தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் போராட்டம்.
திருச்செங்கோட்டில் நடைபெற்ற போராட்டம்
DNT- சமுதாயத்தினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி நாமக்கல் மாவட்டம், திருச்சங்கோட்டில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் தொடர் முழக்கப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அளவில் DNT - பற்றிய விழிப்புணர்வு தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு போதிய அளவு இல்லாத நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் "தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை" யின் ஏற்பாட்டில், DNT சான்றிதழ் பெறும்பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதோடு, தனி இடஒதுக்கீடு கேட்டு போராட்டமும் நடைபெற்றுள்ளது நம்பிக்கை அளிக்கிறது. மற்ற மாவட்ட சமுதாய தலைவர்களும், உள்ளாட்சிப்பிரதிநிதிகளும் அக்கறை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், விரைவில் அனைவருக்கும் சான்றிதழ் பெறமுடியும் என்பதில் ஐயமில்லை. நாமக்கல் தொட்டிய நாயக்கல் சமுதாய அறக்கட்டளைக்கு நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் சென்னை, வீ.பா.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.
போராட்ட படம் மற்றும் தகவல் உதவி: திரு.சரவணன், திருச்செங்கோடு