ஓ.பி.சி.மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துக- கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்ற தொட்டிய நாயக்கர் சமுதாயம் வேண்டுகோள்.
நாமக்கல் மாவட்டம், AIOCC (All India OBC Coordination Committee) சார்பாக OBC இட ஒதுக்கீட்டை முழுமையாக அமுல்படுத்தக்கோரியும், 2020-21 மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் OBC-பிரிவை சேர்க்கக்கோரியும், வரும் ஆகஸ்டு-15 சுதந்திர தினத்தன்று, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுதல் சம்மந்தமான ஆலோசனைக்கூட்டம் தொட்டியநாயக்கர் சமுதாயம் சார்பில் நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள் OBC உறவுகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 100 கிராம பஞ்சாயத்துகளுக்கு தீர்மான நகல், போஸ்டர், அறிவிப்பு விபரம் மற்றும் கையெழுத்து படிவம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.