கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி - சமுதாய அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி.
தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான டாக்டர்.கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
நிகழ்ச்சி விபரங்கள்:-
விருதுநகர் மாவட்டம் ,வடக்குப்பட்டி-பாலவநத்தம் கிராமத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.கலையரசி வரதராஜன் அவர்கள் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியம், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி பகுதியில் ஊராட்சி செயலாளர் திரு.செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர் திருமதி.ஜெயஸ்ரீ செல்வகுமார் அவர்கள் தலைவரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி, தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கினர்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் கொ.நாகராஜன் அவர்கள் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.