கலைஞர் நினைவு நாள் - களத்தில் கலக்கிய ஒன்றிய செயலாளர் திரு.செல்வராஜ்.
தி.மு.க தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கடந்த 07.08.2020 அன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கடைபிடிக்கப்பட்டது. இதில் விளாத்திக்குளம் புதூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் திரு.M.செல்வராஜ் அவர்கள் தன் பகுதிக்குட்பட்ட சின்னவநாயக்கன்பட்டி, கீழ அருணாசலபுரம், நாடுக்கட்டூர், பூதலப்புரம், புதூர் & சிவலார்பட்டி, சுப்புலாபுரம், சங்கரலிங்கபுரம், காடல்குடி, சல்லிசெட்டிபட்டி, இராமச்சந்திரபுரம், சென்னம்பட்டி, K.சுப்பையாபுரம், கவுண்டன்பட்டி, மேலப்பட்டி, கோவில் குமரெட்டையாபுரம், மேலக்கல்லூரணி, கம்பத்துப்பட்டி, K.துரைச்சாமிபுரம், புதுச்சின்னையாபுரம், மாவிலோடை, மாதலப்புரம், லட்சுமிபுரம், L. V. புரம், மிட்டாவடமலாபுரம், N.ஜெகவீரபுரம் ஆகிய கிராமங்களில் நினைவஞ்சலிக்கு ஏற்பாடு செய்து சிறப்பாக நடைபெற்றது. திரு.M.செல்வராஜ் அவர்களின் களப்பணியால் மிகவும் உற்சாகமடைந்துள்ள தி.மு.கவினர் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.