பாஞ்சைகோட்டையில் சுதந்திரதின விழா
இன்று (15.08.2020) 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சி, வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் கமிட்டி சார்பாக,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் சுற்றுலாத்துறை அதிகாரி திரு.சீனிவாசன், ஆலய கமிட்டி தலைவர் திரு.மு.முருகபூபதி, செயலாளர் திரு.ஆ.செந்தில்குமார், து.தலைவர் திரு.செ.முருகேசன் நாயக்கர் மற்றும் திரு.S.வேல்சாமி நாயக்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் அருள்மிகு வீரசக்கதேவி ஆலய வளாகத்தில் பாரிஜாத மலர்க்கன்று நடப்பட்டது.