ஓ.பி.சி.இடஒதுக்கீடு பிரச்சினை - ஓயாத போராட்டத்தில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கம்.
ஓ.பி.சி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீடு மத்திய அரசுப்பணிகளிலும், மருத்துவம் உள்ளிட்ட கல்வி, வேலைவாய்ப்புகளிலும் கடந்த 70 வருடங்களாக முறையாக வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டு வருகிறோம். இடஒதுக்கீட்டை அனைத்து நிலைகளிலும் உரியமுறையில் பின்பற்றக்கோரி அகில இந்திய ஓ.பி.சி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தொடர்போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அக்குழுவில் இணைந்து தொட்டிய நாயக்கர் சமுதாயம் சார்பில் போராட்டங்களில் கலந்து கொண்டு வரும் நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கம், நேற்று (18.08.2020) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தது. இதில் அறக்கட்டளை தலைவர் திரு.மு.பழனிசாமி, உறுப்பினர்.திரு.ரமேஷ், திரு.மணி, திரு.சண்முகம், திரு.சதீஷ், திரு.தங்கராஜ், திரு. வெங்கடாசலம், திரு.ஈஸ்வரன், திரு.சக்திவேல், திரு.சரவணன், திரு.பாலுAtc மற்றும்அகிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.