மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் - விடுதலைக்களம் அழைப்பு
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனையும், நாயக்கர் நாயுடு சமுதாய மக்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வரும் சமூக விரோத கும்பலை கைது செய்யக்கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தொடர்ந்து புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், வரும் திங்கட்கிழமை (07.09.2020) அன்று மதுரையில் கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலைக்களம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமுதாய மக்கள் கலந்துகொள்ள விடுதலைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.