"ஓ.பி.சி.விவகாரம்"சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக - தொட்டிய நாயக்கர் சமுதாயம் கோரிக்கை.
2020-21 மக்கள் தொகை கணக்கெடுப்பில், O.B.C பிரிவினரை தனியாக கணக்கெடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி, நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கம் சார்பில் தலைவர்.திரு.M.பழனிசாமி (இவரைப்பற்றி மேலும் அறிய நீல நிற எழுத்தில் விரல் வைக்கவும்) அவர்கள் தலைமையிலான குழு தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தார்.