🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஆட்சியை இழந்தாலும் அயராத களப்பணியில் கலையரசன்!

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதி அனைவரின் கவனத்தையும் பெற்றது.  அத்தொகுதி உள்ளிட்ட பலதொகுதிகளில் தோல்வியை தழுவிய அதிமுக ஆட்சியை பறிகொடுத்தது.  பொதுவாக ஆட்சியை இழந்தவர்கள் கொஞ்சகாலம் மக்கள் பணிக்கு தலைகாட்ட மாட்டார்கள்.  ஆனால் அதில் விதிவிலக்காக அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் கோ.கலையரசன் தன் ஒன்றியத்திற்குட்பட்ட வெஞ்சமாங்கூடலூர்,கொடையூர், புங்கம்பாடி பகுதிகளில் கழகக்கொடியினை ஏற்றி தூய்மைப்பணியாளர்களுக்கு அரிசி, மளிகைப்பொருட்கள், ரொக்கம் 200/- அடங்கிய நிவாரண தொகுப்பை வழங்கினார்.  அரசியலில் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவதே ஆளுமையை தக்கவைத்துக்கொள்ளும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது கோ.கலையரசன் அவர்களின் களப்பணி.  வாழ்த்துகள்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved