தி.மு.க. தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் - ஈசநத்தம் ஊ.ம.தலைவர் திரு.இராமசாமி காணொலியில் பேச்சு.
ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் உரையாடி வருகிறார். அதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம், ஈசநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.M.N.இராமசாமி (இவர் பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்களுடன் இன்று (27.06.2020) மாலை உரையாடினார். அப்பொழுது ஊராட்சியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளை கேட்டறிந்தவர், கட்சிப் பணிகள் பற்றியும் விவாதித்து ஆலோசனை வழங்கினார். அப்பொழுது தளபதியார் அவர்கள் ஊ.ம.தலைவரின் துணைவியார் மற்றும் மகளுடன் பேசியவர், அவர்களின் உடல் நலன் பற்றி விசாரித்தார்.