போலி தமிழ்தேசிவாதிகளை கைது செய்ய வலியுறுத்தி தென்காசியில் விடுதலைக்களம் போராட்டம்.
தென்காசி மாவட்ட விடுதலைக்களம் சார்பில் இன்று இராயகிரியில் போலி தமிழ் தேசியவாதிகளை கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் திரு.சங்கரநாராயணன் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் திரு.விக்னேஷ் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக கொரோனா பரவலைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஐந்து பேர் மட்டுமே கலந்துகொள்ள போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர். அதனை ஏற்று போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.