🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திட்டங்களில் வாழும் கலைஞர்! நூற்றாண்டு விழா கட்டுரை!

சித்தாங்களை முன்னிறுத்தி அரசியல் களம் கண்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஏறக்குறைய இருபதாண்டுகாலம் கடும் உழைப்பால் மக்களின் மனங்களை வென்று ஆட்சிப்பொறுப்பேற்றதின் விளைவாக அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழகம் தனித்து முன்னேற்றப்பதையில் முன்னனி மாநிலமாக திகழ்கிறது. தமிழகம் தனிச்சிறப்போடு திகழ்ந்திட திமுகவும், கலைஞரும் ஆற்றிய அரும்பணிகள் ஏராளம். கலைஞர் நூற்றாண்டு கொண்டாடும் இவ்வேளையில் அவர் மறைந்து மூன்றாண்டுகள் ஆனாலும் அவர் செயல்படுத்திய திட்டங்களின் மூலம் வாழ்ந்துகொண்டுள்ளார். இப்படி காலம் கடந்தும் புகழ் குன்றாமல் நிலைத்து நிற்கச் செய்யும் கலைஞரின்100 முத்தான திட்டங்களை பட்டியலிடுகிறேன்.  

1. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கியவர் கலைஞர்.

2. கை ரிக்சாவின் பயன்பாடு ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்சா அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் ரிக்சாவில் வைத்து தள்ளிச் செல்லும் முறையை ஒழித்தவர் கலைஞர்.

3. சின்னஞ்சிறு கிராமங்களுக்கும் கூட சாலை வசதிகள் உருவாக்கப்பட்டது. தனியார் வசம் சிக்கியிருந்த போக்குவரத்துத் துறை அரசுடமையாக்கப்பட்டது.

4. சிப்காட் தொழில் வளாகங்கள் உருவாக்கப்பட்டது.

5. சிட்கோ தொழில் வளாகங்கள் கொண்டுவரப்பட்டது.

6. பல மாவட்ட தலைநகரங்களில் தொழிற்நுட்ப பூங்காக்கள் உருவாக்கினார்.

7. சேலத்தில் உருட்டாலை கொண்டு வர உறுதுணையாக இருந்தார்.

8. தமிழக கிராமங்கள் அனைத்திற்கும் மின்சார வசதி உருவாக்கப்பட்டது.

9. தடையற்ற மின்சாரம் கிடைக்க 8 இடங்களில் மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டது.

10. கணினியை பலர் அறியும்முன்பே  சென்னை தரமணியில் 1997-இல் டைடல் பூங்கா மற்றும் தகவல் தொழில்நுட்பதிற்கென புதுக் கொள்கைகள் உருவாக்கப்பட்டது.

11. 14,600 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மெட்ரோ திட்டம் கொண்டுவந்தவர் கலைஞர்.

12.  108 ஆம்புலன்ஸ் சேவைகள் கருணாநிதியின் ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

13. குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டு நகரங்களில் இருந்து குடிசைகள் அனைத்தும் அடுக்குமாடி குடியிருப்புகளாக உருப்பெற்றன. 2010ம் ஆண்டு கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டம் தமிழகத்தில் எங்குமே குடிசைகள் இருக்கக் கூடாது என்ற காரணத்தால் உருவாக்கப்பட்டது.

14. சென்னையில் அதிக அளவு கார் தொழிற்சாலைகளை உருவாக்கி தமிழகத்தின் பொருளாதரத்தில் ஒரு மைல் கல்லை அடைய வைத்த பெருமை கலைஞருக்கு உண்டு. அதனால் தான் சென்னை ஆசியாவின் டெட்ராய்ட் என்று அறியப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

15. மினிபஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அரசு ஊழியர்களுக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள்:

16. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் உருவாக்கப்பட்டது.

17. தமிழக காவல்துறையினருக்கு ஆணையம் அமைக்கப்பட்டது.

18. தொழிலாளர் தினமான மே 1ம் தேதி ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை அறிவித்தவர் கலைஞர்.

19. அரசு ஊழியர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கும் வழக்கத்தை கலைஞர் தொடங்கி வைத்தார்.

விவசாயிகளுக்காக கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்கள்:

20. இந்தியாவிலேயே முதன்முதாலக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்க உத்தரவிட்டவர் கலைஞர்.

21. உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு விளைபொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் கலைஞர் கருணாநிதி.

22. விவசாயிகளுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தவர் கலைஞர்.

23. விவசாயக் கூலிகளுக்கு சம்பள நிர்ணயம் கொண்டு வரப்பட்டது கலைஞர் ஆட்சியில்.

24. கிராமப்புற வளர்ச்சிக்கென நமக்கு நாமே திட்டம் உருவாக்கப்பட்டது. அரசு மானியத்துடன் தங்களின் தேவைகளே தாங்களே பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று அறிமுகப்படுத்தப்பட்டது.

25. கிராமப்புற மேம்பாட்டிற்காக அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பெண்களுக்கான திட்டங்கள்

26. ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அவர்களின் நினைவாக கொண்டுவரப்பட்டது.

27. கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக கைம்பெண் மறுமண நிதி உதவித் திட்டத்தைக் கொண்டுவந்தவர் கலைஞர்.

28. அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தார்.

29. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது கலைஞர் ஆட்சியில்.

30. பெண்களுக்கான இலவச பட்டப்படிப்பிற்கான திட்டங்கள் கொண்டுவரப்பட்டது கலைஞர் ஆட்சியில்.

31. உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு மிகவும் வெற்றிகரமாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டது கலைஞர் ஆட்சியில்.

32. கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது கலைஞர் ஆட்சியில் .

33. ஏழைப்பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டது கலைஞர் ஆட்சியில்.

34. 1989 ல் பெண்களுகள் பொருளாதாரத்தில் யாரையும் நம்பாமல் சுயமாக இயங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது பெண்கள் சுய உதவிக் குழுக்கள். இதன் மூலம் தமிழகத்தில் பெண்களால் சுய தொழில்கள் அதிகம் உருவாகின.

அன்னை தமிழுக்காக கலைஞர் அறிமுகப்படுத்திய திட்டங்கள்

35. இந்தியாவின் இறுதிப் புள்ளி அல்லது மறுமலர்ச்சி இந்தியாவின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் தமிழகத்தின் தென் முனையில் அய்யன் வள்ளுவனுக்கு 133 அடி உயரமுள்ள சிலை வைக்கப்பட்டது.

36. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் தமிழ்மொழிக்கு செம்மொழி அங்கீகாரத்தினை பெற்றுக் கொடுத்துவர் கலைஞர்.

37. உயர்தனிச் செம்மொழியாம் தமிழுக்கு கோவையில் மிக பிரம்மாண்டமாய் தமிழ் அறிஞர்கள் புடைசூழ செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது.

38. சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு மெரினா கடற்கரையில் சிலை நிறுவியவர் கலைஞர்.

39. தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்று பெயரிட்டவர் கலைஞர்.

40. தைத்திருநாளை தமிழர் புத்தாண்டாக அறிவித்தவர் கலைஞர்.

41. மெட்ராஸ் மாகாணம் அண்ணாவின் உழைப்பால் தமிழ்நாடு என்றானது. கலைஞரின் முயற்சியால் மெட்ராஸ் சென்னை என்றானது,

42. மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை இயற்றிய பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக கலைஞர் அறிவித்ததின் விளைவாக 1970களில் இருந்து அரைநூற்றாண்டிற்கும் மேலாக பொதுநிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு வருகிறது.

43. சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் கோட்டையில் கொடியேற்றும் உரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர்.

44. தமிழ் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கும் வகையில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்.

சமூகநீதியில் கலைஞர்

45. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று முதன்முதாலக ஆணையிட்டவர் கலைஞர்.

46. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கான கல்வி தொகையை உயர்த்தி வழங்கியதோடு, அவர்களுக்கான விடுதிகளும் திறந்தவர் கலைஞர்.

47. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 30 சதவீதம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீடும் வழங்கியவர் கலைஞர்.

48. அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து வாழும் வகையில் சமத்துவபுரங்கள் தமிழகமெங்கும் உருவாக்கியவர் கலைஞர்.

49. இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5 சதவீத இடஒதுக்கீட்டினை அளித்தவர் கலைஞர்.

50. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்தவர் கலைஞர் .

51. ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தந்தவர் கலைஞர்.

52. கலப்பு திருமணம் செய்துகொள்பவர்களுக்கு ஊக்கத் தொகை தந்து கௌரவம் செய்தது திமுக அரசு.

53. வன்னியர் மற்றும் சீர்மரபினர் உள்ளிட்ட 108 சாதிகளை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை உருவாக்கி 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கினார்.

54. அருந்ததியருக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்.

55. சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி, சமூக இணக்கத்தை வளர்க்க சமத்துவ பொங்கலை அறிமுகம் செய்து கொண்டாட வைத்தவர் கலைஞர்.

கல்வித்துறையில் கொண்டு வரப்பட்டத் திட்டங்கள்

56. பொறியாளர் பட்டப்படிப்பிற்காக நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வினை ரத்து செய்யப்பட்டது.

57. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியருக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்பட்டது.

58. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கும் வகையில் 2006 இல் ஆட்சிக்கு வந்த கலைஞர் மதிய உணவில் வாரம் இரண்டு முட்டை வழங்கிட ஆணை வெளியிட்டார்.

59. மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டது.

60. தமிழகத்தில் அதிக அளவு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டது.

61. நெல்லையில் மனோன்மணியம் பல்கலைக்கழகம் தொடங்கி, சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம், சென்னையில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழங்கள் கட்டப்பட்டது.

கருணாநிதி அறிமுகப்படுத்திய இதர திட்டங்கள்

62. நில உச்சவரம்பு சட்டத்தின் மூலம் விவசாயக்கூலிகளை நிலவுடமையாளர்களாக்கியவர் கலைஞர்.

63. நில விற்பனை வரையறை சட்டம் அறிமுகம் செய்தவர் கலைஞர்.

64. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் செய்தவர் கலைஞர்.

65. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கான ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.

66. தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தினை நிறுவியவர் கலைஞர்.

67. பிச்சைக்காரர்கள் மற்றும் தொழுநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்கள் இவரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

68. ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டத்தினை கொண்டுவந்த கலைஞர், உடல் ஊனமுற்றோரை மாற்றுத்திறனாளிகள் என்று அழைத்திட ஆணையிட்டார்.

69. ரேசன் கடைகளில் ஒரு கிலோ அரிசியினை 2 ரூபாய்க்கும் பின்னர் 1 ரூபாய்க்கும் விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

70. மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்  அல்லது கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

71. மக்களுக்கு இலவச கண் மருத்துவமுகாம்கள் நடத்தப்பட்டு பின்னர் இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

72. அரவாணிகள் என்று அழைக்கப்பட்ட மூன்றாம் பாலித்தினவர்களுக்கு திருநங்கைகள், திருநம்பிகள் என்று பெயர் சூட்டி அவர்களுக்கான தனி நல வாரியம் அமைத்தவர் கலைஞர்.

73. நாட்டுப்புற கலைஞர்களுக்கான நலவாரியம் அமைத்துக் கொடுத்தவர் கலைஞர்.

74. மொழிப்போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஓய்வூதியம் அளித்தவர் கலைஞர்.

75. சுதந்திரந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி அளித்தவர் கலைஞர்.

76. ஏழை மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கியவர் கலைஞர்.

77. சீரான மற்றும் விரைவான போக்குவரத்து வசதிக்காக நான்கு வழிச்சாலைகளை அதிகம் உருவாக்கியவர் கலைஞர்.

78. போக்குவரத்துத்துறையை அரசுடமையாக்கியது மட்டுமின்றி அதற்கென தனித்துறையை உருவாக்கியவர் கலைஞர்.

79. நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைத்துத்தந்தவர் கலைஞர்.

80. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள்களை நடைமுறைப்படுத்தியவர் கலைஞர்.

81. இந்தியாவில் முதன்முதலாக  சட்டக்கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர் சூட்டியவர் கலைஞர்.

82. இஸ்லாமியர்களுக்காக உருது அகாடமி உருவாக்கியவர் கலைஞர்.

83. தேர்வுகளில் மாவட்ட மாநில அளவில் முதல் மூன்று இடம் பிடிப்பவர்களுக்கு மேற்படிப்புக்கு உதவித் தொகை வழங்கி சிறப்புச் செய்தவர் கலைஞர்.

84. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மேம்பாலங்களை அறிமுகம் செய்தவர் கலைஞர்.

85. ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்தவர் கலைஞர்.

86. மாவட்டங்களுக்குள் நதி நீர் இணைப்பு சாத்தியமாக்கியவர் கலைஞர்.

87. காமராஜரின் பிறந்தநாளை கல்வி மேம்பாட்டு நாளாக அறிவித்தவர் கலைஞர்.

88. தமிழகத்தில் 420 பேரூராட்சிகளை உருவாக்க உத்தரவிட்டவர் கலைஞர்.

89. ராமநாதபுரம் – பரமக்குடி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.

90. மாலை நேரம் மற்றும் விடுமுறை தின நீதிமன்றங்கள் உருவாக்கியவர் கலைஞர்.

91. மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை தொடங்கியவர் கலைஞர்.

92. ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடியவர் கலைஞர்.

93. 12 அரசு பல்கலைக்கழகங்களை உருவாக்கியவர் கலைஞர்.

94. பேருந்து போக்குவரத்துக் கட்டணம், பால் விலை, மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலை உயர்வை தடுத்தவர் கலைஞர்.

95. இல்லம்தோரும் இலவச வண்ணத் தொலைக்காட்சிகளை கொடுத்தவர் கலைஞர்.

96. உணவுப் பொருட்களை மலிவு விலையில் ரேசன் கடைகளில் கிடைக்கச் செய்தவர் கருணாநிதி.

97. 10 வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடமாக்கியவர் கலைஞர்.

98. ஆசியாவின் மிகப்பெரிய பேருந்துநிலையத்தை உருவாக்கியவர் கலைஞர்.

99. ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை உருவாக்கியவர் கலைஞர்.

100. சுதந்திரப்போராட்ட மாவீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் உள்ளிட்ட பலருக்கு நினைவுச் சின்னம் எழுப்பியவர் கலைஞர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved