ஓர் இந்திய ராணுவ அதிகாரியின் துரோக வரலாறு!

ரபீந்தர் சிங், 1970 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் கூர்க்கா படைப்பிரிவில் சேர்ந்து மேஜர் பதவிக்கு முன்னேறியவர். 80-களின் பிற்பகுதியில் இந்திய உளவுத்துறையான 'ரா' (R&AW) வில் தென்கிழக்கு ஆசிய விவகாரங்களுக்கான இணைச் செயலாளராக இருந்தார். 1984 சீக்கியர் பொற்கோயிலில் நடந்த 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரில்' முக்கிய பங்கு வகித்தார்.
இந்திய ராணுவத்தில் பணியாற்றிய லெஃப்டினன்டின் ஒருவரின் மகனான ரபீந்தர் சிங்கின் மகள் அமெரிக்காவில் படித்து வந்தார். சிங்கின் மகள் 1992 அல்லது 1993 இல் விபத்து ஒன்றில் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. தனது மகளின் சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. அங்கே அவரை பார்க்க சென்றபோது சி.ஐ.ஏ பார்வை அவர் மேல் விழுந்தது. அதன்பின் ஹனி டிராப் எனும் உத்தியால் அவர் சி.,ஐ .ஏ வசம் வந்ததாக தகவல். ஹனி டிராப் என்பது அழகிகளை வைத்து ஒருவரை வீழ்த்துவது.
இந்தியா திரும்பிய ரன்பீர் சிங் சி.ஐ.ஏ உளவாளி ஆனார். பைல்கள் டிஜிட்டைஸ் ஆகாத 2003ம் ஆண்டு காலகட்டம். அரசாங்க பைல்களின் காகிதங்களை ஜெராக்ஸ் எடுத்து வந்து, வீட்டு கணிணியில் இருந்து ஸ்கான் செய்து சி.ஐ.ஏவுக்கு அனுப்புவார்.
"கைல காசு, வாயில் தோசை" என்பதற்கு ஏற்ப அனுப்பும் தகவல்களின் மதிப்புக்கு ஏற்ற சன்மானம் கிடைத்து வந்தது. மேலும் காசு வேண்டுமெனில், மேலும் தகவல்கள் வேண்டும்.
மெதுவாக மற்ற அதிகாரிகளிடம் பேச்சுகொடுத்து ரகசியங்களை அறிய முயன்றார். இது ரா வட்டாரத்தில் சந்தேகத்தை உருவாக்கியது. அங்கே யாரும் இப்படி மற்றவர்களின் தொழில்சார் ரகசியங்களை கேட்கமாட்டார்கள். இவரது மகள் அமெரிக்காவில் இருப்பதும் சந்தேகத்தை உருவாக்கியது.
இவரை பொறிவைத்து பிடிக்க "சி.ஐ.ஏவின் ரகசிய கேபிள் ஒன்று ஒரு ஹேக்கரிடம் இருப்பதாகவும், அதற்கு 1 லட்சம் டாலரை அவன் கேட்பதாகவும்" ரகசிய தகவல் அவரிடம் கசிய விடபட்டது. தகவலை சொன்னவர் அதற்கு மேல் எதையும் சொல்லவில்லை.
இவர் பதறி அடித்துக்கொன்டு, சி.ஐ.ஏவிடம் சொல்ல, அவர்கள் அதை மேலும் பல உளவாளிகளிடம் சொல்லி, மேல் விவரத்தை தேடச் சொல்ல, ரபீந்தர் சிங் மூலம் தான் தகவல் சி.ஐ.ஏவுக்கு போனது என உறுதியானது. ஏனெனில் இவரை தவிர வேறு யாரிடமும் அந்த பொய் தகவல் சொல்லப்படவில்லை.
ஆனால் கைது செய்ய ஆதாரம் வேண்டுமே?
இவரது கார், அலுவலகத்தில் ரக்சைய டேப்புகள் பொருத்தப்பட்டன. ஆனால் எல்லா தகவல் தொடர்பும் வீட்டு கணிணி மூலம் எழுத்தில் தான் என்பதால் எதுவும் மாட்டவில்லை. வீட்டு கணிணியை ஹேக் செய்யவும் ரா தவறிவிட்டது.
ஒரு நாள் திடீர் என மாலை ரா அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புகையில் எல்லாரையும் சோதனை செய்தார்கள். இவரை பிடிக்க விரிக்கபட்ட வலை அது. தெய்வாதீனமாக இவரிடம் அன்று எந்த பேப்பர்களும் இல்லை.
ஆனால் இவருக்கு அது சந்தேகத்தை உருவாக்கியது. வீடு திரும்பியவர் பல விசயங்களை யோசித்தார். தான் சந்தேக வலையில் இருப்பது கன்பர்ம் ஆனது.
மனைவியிடம் விவ்ரத்தை சொல்லாமல் "ஒரு முக்கிய அசைன்மென்ட்" என சொல்லி அவரை அழைத்துக்கொண்டு, ஒரு காரை கடன் வாங்கி நேபாள எல்லைக்கு ஓட்டிச் சென்று, நேபாள்கஞ்சில் கடந்து சென்றனர், அங்கு சிங்கின் சிஐஏ தொடர்பு அதிகாரி டேவிட் வக்காலா அவர்களைச் சந்தித்தார் .பேருந்து ரயில் என எப்படியோ நேபாளம் சென்று நேபாள எல்லைக்குள் நுழைந்துவிட்டார்கள். அங்கிருந்து சி.ஐ.ஏ உதவியுடன் அமெரிக்கா தப்பிவிட்டார்.
ரா அதிகாரிகள் சர்ச் வாரண்ட் வாங்கிகொண்டு வீட்டு கணிணியை திறக்க, அனைத்து ஆதாரங்களும் அதில் இருந்தன.
அமெரிக்கா சென்ற ரபீந்தர் சிங்குக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அமெரிக்க அரசு அவருக்கு அகதி விசா வழங்கியது. காசு, பணம் எதுவும் கொடுக்கவில்லை.
"செய்த வேலைக்கு கூலி கொடுத்தாகிவிட்டது. உயிரை காப்பாற்றி கொடுத்துவிட்டோம். இந்தா அகதி விசா. எதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்" என சொல்லிவிட்டார்கள்.
தேசத்துரோகம் செய்ததால் அதிர்ச்சி அடைந்த மகளும், மனைவியும் இவரை அடித்து விரட்டிவிட்டார்கள். அல்லது அவர்களுக்கு பிரச்சனை வரக்கூடாது என்பதால் இவர் அவர்களை விட்டு விலகியதாகவும் இருக்கலாம். எப்படியோ ரபீந்தர் சிங் அமெரிக்காவில் அனாதை ஆனார். அடித்தட்டு வேலைகளை செய்து, வீடற்றவராக வாழ்ந்து வந்தார்.
ஆனால் ரா யாரையும் மறப்பதும் இல்லை, மன்னிப்பதும் இல்லை. அவரை அமெரிக்காவில் ரா தொடர்ந்து தேடி வந்தது. அவர் போலி பெயரில் நியூ ஜெர்ஸியில் கடும் வறுமையில் வசிப்பதாக தகவல் வந்தது.
2016 அமெரிக்காவின் மேரிலாந்திலுள்ள சாலையை கடக்க முயல்கிறார் ரபீந்தர் சிங். வேகமாக வந்த கார் ஒன்று அவர்மேல் மோதிவிட்டு மறைந்தது. ஸ்பாட் அவுட்.
ரா செய்த கொலையா? விபத்தா?
யாருக்கு தெரியும்? ஒரு துரோகத்தின் கதை இப்படி அன்னிய மண்ணில் அனாதையாக முடித்து வைக்கபட்டது.
தெய்வம் நின்று கொல்லும். வரலாறு காலம் முழுக்க கொல்லும்...
நன்றி : நியாண்டர் செல்வன்