DNT-இட ஒதுக்கீடு இழைக்கப்பட்ட அநீதி பற்றி அறிந்துகொள்வோம்-பகுதி-3
ஒரு உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது.
வன்னியர்களின் 40 ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்தது. இல்லை ஒரு தனி நபரின் அதிகார இச்சைக்காக 40 நிமிடத்தில் நடத்தப்பட்ட கபட நாடகம், சமூகநீதி கொள்ளை. மற்ற மக்கள் பிரதிநிதிகள் அடிமைகளாக இருந்து மற்ற சமூகத்திற்கு துரோகம் செய்து கழுத்தை அறுத்துவிட்டனர். சட்ட மன்ற விதிகளின் படி 5 நாட்களுக்கு முன்பே அனைத்து உறுப்பினர்களும் வரைவு மசோதா வழங்கியிருக்க வேண்டும். யாருக்கும் எப்போதும் வரைவு மசோதாவை வழங்காமல் மூன்று சீட்டு/திரிக்குத்து வேலையை போல் இயந்திரத்தனமான/வில்லத்தனமான சிரிப்போடு துறைக்கு சம்பந்தமில்லா அமைச்சர் சட்டத்தை கொண்டு வந்தார். எதிர்கட்சி மொத்த கூட்டத்தொடரையும் புறக்கணித்துள்ளது என்பதை தெரிந்தும் எந்த விவாதத்திற்கும் வாய்ப்பே இல்லாமல் பல சட்டமன்ற மரபுகளையும் விதிகளையும் படுகொலை செய்துவிட்டு மிக மோசமான சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இங்கு கேள்வி கேட்க ஆள் இல்லை. எல்லாம் வாக்கு அரசியல். வன்னியர் வாக்கு கிடைக்காது என்ற எண்ணம். இங்கு நீதிக்காக சட்டத்திற்காக குரல் கொடுக்க ஒரு கட்சியும் இல்லை என்பது மட்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பதிவு தொடரும்.
சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் 115 சமுதாய அமைப்புகள்.