சப்தரிஷி பாரத்துவாசர்!
பாரத்துவாசர் அல்லது பாரத்துவஜர் (Bharadwaja) சப்தரிஷிகளுள் ஒருவர். ஆங்கிரச குலத்தைச் சார்ந்தவர். ரிக்வேத கால முனிவர்களில் ரிக்வேதத்தில் அதிக சூக்தங்கள் இயற்றியவர். இவர் பெரும் புலமை பெற்றவர். பல மந்திரங்களை இவர் உருவாகியுள்ளார்.
இராமாயணத்தில் இராமர் வனவாசத்தின் போது இம்முனிவரின் குடிலில் தங்கி சில நாட்கள் தங்கி இருந்தார். துரோணாச்சாரியர் இவரது புதல்வரே. இவரது தவ வலிமையை பல புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன.