அனைத்துவித நோய்களுக்கும் நுரையீரலே கவசம்!
சென்னை, வீ.க.பொ.இயாஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் கம்பளத்தார் சமுதாயத்தில் முதல் காணொளி மருத்துவ ஆலோசனை முகாம் கடந்த 17.10.2021-ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் திருப்பூர் நுரையீரல் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பொம்முசாமி கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். முன்னதாக த.வீ.க.ப.கழகத்தின் மாநில அவைத்தலைவர் P. S.மணி , புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், கோவை 100-வது வட்டச்செயலாளர் ஈச்சனாரி மகாலிங்கம், மத்திய பொதுப்பணித்துறை அதிகாரி இராமராஜ் உள்ளிட்டோர் மருத்துவர் பொம்முசாமியை வாழ்த்திப்பேசினர்.
இதனைத்தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார். இதில் எல்லா நோய்களுக்கும் அடிப்படை கவசமாக இருப்பது நுரையீரல் என்றும், அதனை நல்ல முறையில் பராமரிப்பதே முதல் கடமை என்றும் விளக்கினார். மருத்துவரின் ஆலோசனை வீடியோவில்.