தலைவர்களின் புகழ்மழையில் ஐயா.வையப்ப நாயக்கர்!
இராஜகம்பள மகாஜன சங்கத்தின் மு.தலைவர் ஐயா.வையப்ப நாயக்கரின் 44-வது நினைவுநாள் மிகுந்த எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது.
நேற்று காலை 10.00 மணியளவில் விடுதலைக்களம் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் புகழஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது. இதில் தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, பூவரசி. ராஜேந்திரன் உள்ளிட்ட சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மாலை நடைபெற்ற காணொளி புகழஞ்சலி கூட்டத்தில் தமிழகம் முழுவதிலிமிருந்து 40-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஐயா.வையப்ப நாயக்கர் இச்சமுதாயத்திற்கு ஆற்றிய பணி குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
தொழிலதிபர் திரு.பி.எஸ்.மணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த காணொளி புகழஞ்சலி கூட்டத்தில் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் செல்வராஜ், அ.காசிராஜன், ஈச்சனாரி.மகாலிங்கம், கொ.நாகராஜன், இராதாகிருஷ்ணன், போடி. சௌந்தரபாண்டியன், இராமராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.