கம்பளத்தார் சமுதாய தோட்டத்தில் பூத்த ஒற்றை ரோஜா க.சுப்பு! - காசிராஜன் பேச்சு.
கம்பளத்தார் சமுதாயத்தின் ஒப்பற்ற அரசியல் ஆளுமை அமரர் க.சுப்பு அவர்களின் 10-ஆம் ஆண்டு நினைவுநாள் கடந்த 29.10.2021 அன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், விடுதலைக்களம் உள்ளிட்ட தோழமை இயக்கங்கள் இணைந்து காணொளி நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிமிருந்து தலைவர்கள் கலந்துகொண்டு அன்னாரின் புகழை நினைவுகூர்ந்தனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பிரமுகர் அ.காசிராஜன், அரசியல். சமுதாயப்பணியில் க.சுப்பு ஆற்றிய பல்வேறு பணிகளை நினைவுகூர்ந்தார்.