DNT - சமுதாயத்திற்கு தனி இடஒதுக்கீடு வழங்குக!!!- செல்வி. "சுசீந்திரா பழனிச்சாமி" உரிமைக்குரல்!!!
DNT-பிரிவினருக்கு ஓபிசி-யில் 9% உள்ஒதுக்கீடு வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் காலதாமதம் செய்துவருவதைக் கண்டித்து இணையதள வழியாக தொடர்முழக்கப் போராட்டங்களை பல்வேறு அமைப்புகளும் ஒருங்கிணைந்து முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக "தொட்டிய நாயக்கர்" சமுதாயத்தின் சார்பில் போராட்டத்தை நாமக்கல் "தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை" முன்னெடுத்து செல்கிறது. DNT - பிரிவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழிக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் செல்வி.சுசீந்திரா பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான குரலை வலுவாக எடுத்து வைத்தார்.