🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வைப்பார் போராட்டம் - மாவீரனை இழிவுபடுத்துவதா? ஓடோடி வந்த எம்.எல்.ஏ. சின்னப்பன்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, வைப்பார் கிராமத்தில், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனை இழிவு படுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டு, சமூக நல்லிணக்கத்தை குழைக்கும் சமூகவிரோதிகளை உடனடியாகக் கைது செய்யக்கோரி, அக்கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,போராட்டக்காரர்களுடன்  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன், விளாத்திகுளம் வட்டாட்சியர்  மற்றும் அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கு காரணமான நபர் மீது 5 பிரிவுகளில் IPC153A  .500; 504:505 1C,2 ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஒரு சில தினங்களில் அந்த நபர் கைது செய்யப்படுவார் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

கம்பளத்தார்களுக்கு உதவிக்கரம் நீட்ட ஓடோடி வந்த விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினருக்கு ஆலயக்குழு சார்பிலும், தமிழகம் முழுதும் வாழும் 40 லட்சம் கம்பளத்தார் சார்பிலும் நன்றி.. நன்றி.



  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved