தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
ஓ.பி.சி-யினருக்கு வழங்கவேண்டிய இடஒதுக்கீட்டை முழுமையாக அமுல்படுத்துக!!! - தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட ஓ.பி.சி. அமைப்புகள் கருப்புக்கொடி போராட்டம்.

ஓ.பி.சி-யினருக்கு வழங்கவேண்டிய இடஒதுக்கீட்டை முழுமையாக அமுல்படுத்துக!!! - தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட ஓ.பி.சி. அமைப்புகள் கருப்புக்கொடி போராட்டம்.

Admin 18 Jul 2020 | 06:01 PM
பகிர்:

மத்திய அரசுப்பணிகளிலும், கல்வியிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓ.பி.சி) வழங்கப்படவேண்டிய இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்ற வலியுறித்தியும், ஓ.பி.சி.மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், சர்மா கமிட்டி அறிக்கையை நிராகரிக்க வலியுறுத்தியும் தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகள் உள்ளிட்ட ஓ.பி.சி அமைப்புகள் இன்று (18.07.2020) போராட்டம் நடத்தியது.

நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் திருச்செங்கோடு, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளிலும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பட்டக்காரர் திரு.நடராஜ் அவர்கள் தலைமையிலும் வீடுகளுக்கு முன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

இராசிபுரம், பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் விடுதலைக்களம் திரு.கொ.நாகராஜன் தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பு செயலாளர் திரு.மு.அன்பழகன், இராசிபுரம் ஒன்றிய செயலாளர் திரு.தமிழரசு,  தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Viduthalaikkalam Ko.nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண