ஓ.பி.சி.இடஒதுக்கீடு மறுப்பு - போராட்டத்தில் குதித்த தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர்.
மருத்துவ மேற்படிப்புகளிலும், மத்திய அரசு பணிகளிலும் தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட ஓ.பி.சி பிரிவு மக்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுவதைக்கண்டித்து தமிழகம் முழுவது பல்வேறு சமுதாய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த அழைப்பைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் குமரிபாளையம்-ஊனங்கால்பட்டி. மல்லுமாசம்பட்டி, நல்லையம்பட்டி, போடிநாயக்கன்பட்டி, திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கருப்புக்கொடி ஏந்தி , மத்திய அரசை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.