மின் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க உள்ளாட்சி தலைவர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.
மின் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் இன்று (21.07.2020) தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.சம்பத்குமார் கலந்து கொண்டு கருப்புக்கொடி ஏந்தி மின்கட்டண உயர்வைக் கண்டித்து முழக்கமிட்டார்.
கோவையில் நடைபெற்ற போராட்டத்தில் திரு.மகாலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.க.மாசிலாமணி ஆகியோர் கலந்து கொண்டு கருப்புக்கொடி ஏந்தி மின்கட்டண உயர்வைக்கண்டித்து முழக்கமிட்டனர்.