நாயுடு-நாயக்கர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய நேதாஜி சுபாஷ் சேனா.
மொழியின் அடிப்படையில் பிரிவினையை தூண்டுகின்ற வகையிலும், தெலுங்கு நாயக்க மாமன்னர்கள் திருமலை நாயக்கர் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் மீது தொடர்ந்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசியும், எழுதியும் வரும் போலி தமிழ் தேசியவாதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேதாஜி சுபாஷ் சேனா அமைப்பின் சார்பாக மாபெரும் முற்றுகை போராட்டம் இன்று (22.07.2020) காலை நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேதாஜி சுபாஷ் சேனா தலைவரும், வழக்கறிஞருமான திரு.எல்.மகாராஜன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைக்களம் உள்ளிட்ட பல்வேறு தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகள் கலந்து கொண்டன.