🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வெற்றிகரமாக நடைபெற்ற விடுதலைக்களத்தின் ஆட்சியர் அலுவலம் முற்றுகை போராட்டம்.

வெற்றிகரமாக நடைபெற்றது முற்றுகை போராட்டம்!

இனமான நாயக்கர்-நாயுடு உறவுகளுக்கு வணக்கம்!

அமைப்பூங்காவான தமிழகத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் அரசியல் சட்டத்திற்கு புறம்பாக சாதிய பிரிவினை பேசி சமூக வலைதளங்களில் சாதிய மோதல்களை தூண்டுகிற கருத்துக்களை பரப்புவோர் மீது, 

குறிப்பாக தமிழகத்தில் பன்னெடுங்காலமாக தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் நாயக்கர்-நாயுடு சமுதாயத்தையும், அச்சமுதாயத்தில் பிறந்து இம் மண்ணிற்காக வாழ்ந்து இன்னுயிர் நீத்த இந்திய சுதந்திரத்திற்காக முதல் குரல் எழுப்பிய மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனாரையும், மதுரை மாநகரை அழகுடன் வடிவமைத்து தென்தமிழகத்தில் இந்து சமயத்தை தழைத்தோங்கச் செய்த மாமன்னர் திருமலை நாயக்கரையும், தொடர்ந்து இழிவாக பேசிவருவதுடன், அவர்கள் குறித்து வரலாற்று உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பி வருபவர்கள் மீது பலமுறை புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையிலும், அவர்கள் மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காத மாநில அரசை கண்டித்தும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,

இன்று (07/09/2020) திங்கட்கிழமை காலை சரியாக 10:00  மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் முற்றுகை போராட்டம் *விடுதலைக்களம் சார்பில் விடுதலைக்களம் நிறுவனத் தலைவர் அண்ணன் கொ நாகராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

போராட்டத்திற்கு தமிழ்நாடு தெலுங்கு சம்மேளன மாநில தலைவர் திரு.வெ. வேங்கடவிஜயன் முன்னிலை வகித்தார். தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் திரு.கே.சி. திருமாறன் ஜி தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார்.தேசிய செட்டியார் பேரவை நிறுவனத்தலைவர் திரு.பி.எல்.ஏ . ஜெகநாத் மிஸ்ரா முடித்து வைத்து சிறப்புரையாற்றினர். தமிழ் மாநில நாயுடு பேரவை நிறுவனத் தலைவர் திரு.என்.கிருஷ்ணமூர்த்தி நாயுடு, தமிழ்நாடு கம்மா நாயுடு எழுச்சி பேரவை மாநிலத் தலைவர் திரு.எஸ். செல்வராஜ், விஜய நகர புரட்சி படை நிறுவனர் திரு.வைகை பாண்டியன், நாயுடு மகாஜன சங்க மாநில பொருளாளர்  டாக்டர் திரு.சன்னாசி, வெலம நாயுடு சங்க மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.வெங்கட்ட ராமன், தமிழக வெலம நாயுடு இளைஞர் எழுச்சி பேரவை தலைவர் திரு.ஏ. காளிதாஸ்,மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் திரு.என். சிவன்ராஜ் நாயக்கர், நாயுடு மகாஜன சங்க மதுரை மாவட்ட தலைவர் திரு.சப்னா மகாராஜன், தமிழக நாயுடு நாயக்கர் பேரவை மாநில இளைஞர் அணித்தலைவர் திரு.எஸ்.எஸ்.பிரேம்குமார், நாயக்கர் நாயுடு பேரவை நிறுவனத் தலைவர் திரு.மெய். தனபாலன், தொழுவா நாயக்கர் மகாஜன சங்க மாநிலத் தலைவர் திரு.எஸ்.ஏ. கட்டபொம்மு ராஜா, மாமன்னர் திருமலை நாயக்கர் பண்பாட்டு கழக நிறுவனத் தலைவர் திரு.வி.கே. சுந்தர்ராஜன், தெலுங்கர் மகாஜன சங்க மாநிலத்தலைவர் திரு.ஜி.வி. பாலமுகருகன், தமிழ்நாடு இளைஞர்கள் சங்க விருதுநகர் மாவட்ட தலைவர் திரு.விக்னேஷ்குமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கை குறித்தான கோரிக்கை மனு, மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இடத்தில் வழங்கப்பட்டது.

இம்மண்ணில் நமக்கான உரிமையை நிலைநாட்டவும், நாயக்கர்-நாயுடு இனம் மற்ற எவருக்கும் குறைந்த இனம் அல்ல என்பதை பறைசாற்றும் விதமாகவும், முற்றுகை போராட்டத்திற்கு திரளாக வந்து கலந்து கொண்ட அனைத்து நாய்க்கர்-நாயுடு இன இளைஞர்களுக்கும், சகோதர சமுதாய சங்க தலைவர்களுக்கும், இளைஞர்களுக்கும், விடுதலைக்களம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

விடுதலைக்களம்,

தலைமையகம்.

நாள்: 07/09/2020.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved