🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உள்ளூர் மக்களின் உற்சாக வரவேற்பில் திளைத்த தலைவர்! - பணிசிறக்க வாழ்த்துகள்!

நெல்லை,தூத்துக்குடி,தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்குழு உறுப்பினராக, அதிமுக தூத்துக்குடி மாவட்ட பிரதிநிதியும், வைப்பார் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவருமான திரு.செண்பகப்பெருமாள் அவர்கள் இன்று (06.01.21) பதவி ஏற்றுக்கொண்டார்.


இதனைத்தொடர்ந்து, தனது சொந்த ஊரான வைப்பார் கிராமத்திற்கு வருகை தந்த திரு.செண்பகப் பெருமாள் அவர்களுக்கு ஊர்பொதுமக்கள் சார்பாக பட்டாசு வெடித்து, பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில்  ஊர் பெரியோர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு திரு.செண்பகப்பெருமாள் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சியின் முடிவில்,வைப்பாரிலுள்ள மாவீரன் வீரபாண்டியகட்டபொம்மன் நினைவு ஆலயத்தில் மாலை அணிவித்து வழிபாடு செய்தார்.

ஒழுங்குமுறை விற்பனைக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு.செண்பகப்பெருமாள் அவர்களுக்கு சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துகள்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved