கல்விக்கண் திறக்க உதவும் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.சுந்தரி அன்பரசு!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கொத்தப்புள்ளி ஊராட்சியில் உள்ள ஏழை குழந்தைகள் 76 பேரின் கல்வித்திறனை மேம்படுத்தும்பொருட்டு, ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.சுந்தரி அவர்களும், அவருடைய கணவரும், தொழிலதிபருமான திரு.அன்பரசு அவர்களும் இணைந்து, இலவச டியூசன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கான முழு செலவையும் ஏற்றுள்ள இந்த தம்பதியினர், இந்த ஊராட்சியில் இன்னும் மீதமுள்ள குழந்தைகள் அனைவருக்கும், கற்றல் திறனை மேம்படுத்த உதவிகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
ஏழைகளின் கல்விக்கண் திறக்க முன்வந்துள்ள திருமதி.சுந்தரி அன்பரசு தம்பதிகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் இத்தம்பதியினரின் கல்விச்சேவை தொடர நாமும் வாழ்த்துவோம்.