சிலம்பாட்ட வீராங்கனை சாத்விகா-வின் நாட்டிய அரங்கேற்றம்!
கோவை, குனியமுத்தூர் பகுதியச்சேர்ந்த மாணவி சாத்விகா ஏற்கனவே சிலம்பாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். சிலம்பம் தவிர படிப்பிலும் சுட்டியான சாத்விகா பலதுறைகளில் தடம்பதித்து வருகிறார். அந்த வகையில் தஞ்சாவூர் கலாவித்யாவில் இணைந்து பரதக்கலை பயின்ற சாத்விகாவின் நாட்டிய அரங்கேற்றம் கோவையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உறவினர்களும், நண்பர்களும் மாணவி சாத்விகா-வை வாழ்த்தினர்.