🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கமுதியில் கம்பளத்தார் கொண்டாடிய சித்திரைத்திருவிழா!

ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி வெள்ளியன்று பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவிலில் கொண்டாடப்படும் சித்திரைத்திருவிழா கொரனோ பெருந்தொற்று காரணமாக எளியமுறையில் நிர்வாகத்தினரால் கொண்டாடப்பட்டது.


இவ்விழாவில் இராமநாதபுரம் மாவட்ட கிராமங்களிலிருந்து பெருமளவு தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் கலந்து கொள்வது வழக்கம். ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டிலும் அருள்மிகு வீரசக்கதேவியை வணங்கமுடியாத சூழல் நிலவியதால், கமுதி வட்டம், நீராவி கரிசல்குளம் கிராமத்தைச்சேர்ந்த இராஜகம்பளத்தார் சமுதாய மக்கள் உள்ளூரிலேயே விழாவினை ஏற்பாடு செய்து, ஜோதியேற்றி அன்னை வீரசக்கதேவியை வழிபட்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved