🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சட்டம் தெரியாத மாவட்ட வருவாய் அதிகாரியே! - கம்பளத்தாருக்காக நடுரோட்டில் முழங்கிய குரல்!

40 லட்சம் மக்கள்தொகை கொண்ட கம்பளத்தார் சமுதாயத்தில் அரசியல் தலைவர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால் சமுதாயப்பிரச்சினைக்காக யாரும் இதுவரை பொதுவெளியில் ஓங்கி குரல்கொடுத்ததில்லை. தொட்டிய நாயக்கர் சமுதாயப்பிரச்சினைகளில் நமக்கு பல ஆண்டுகளாக குரல்கொடுத்து வருபவர் வழக்கறிஞர் திரு.நல்வினை விஸ்வராஜூ அவர்கள். ஈரோடு மாவட்டம் பெரியபுலியூர் கிராமத்தில் 300 ஆண்டுகால பழமையான மாலா கோவிலை அகற்ற நினைத்த மாவட்ட நிர்வாகத்திற்கெதிராக விடுதலைக்களம் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜூ அவர்கள் நடுரோட்டில் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை செய்யும் விதமாக கடுமையாக விமர்சித்துப்பேசினார்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved