நலச்சங்க நன்கொடையாளர் இல்ல திருமணவிழா! - தலைவர்கள் வாழ்த்து.
சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளரும், திருப்பூர் ஏஞ்சல் பிரிண்டர்ஸ் உரிமையாளருமான தொழிலதிபர் திரு.முருகன் இல்ல திருமணவிழா இன்று காலை நாமக்கல் அருகேயுள்ள புதன் சந்தையில் நடைபெற்றது.
www.thottianaickermatrimony.com இணையதளம் மூலம் இணைந்துள்ள செல்வன். G.மணிவண்ணன்-செல்வி.M.வைஷாலி (எ) ப்ரீத்தி ஆகியோரின் திருமண விழாவில் வீ.க.பொ.பண்பாட்டுக்கழக கௌரவ தலைவர் நல்லாசிரியர்.சங்கரவேலு, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர், நாமக்கல் பழனிச்சாமி, சுப்புராஜ், இளைஞரணி சந்திரசேகரன், விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், பிடிஓ நாகப்பன், கோவை ரமணக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.