இராஜகம்பள சமுதாய நலச்சங்க குடும்ப திருமணம்! - தலைவர்கள் வாழ்த்து.
சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மூத்த ஆலோசரும், பர்பிள் கிளப் (ரூ.200000/-) நன்கொடையாளரும், பெட்ரோ 6 இஞ்சினியரிங் & கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவன தலைவர் தொழிலதிபர் திரு.துரைசாமி அவர்களின் இல்ல திருமண வரவேற்பு கடந்த சனிக்கிழமை 05.03.2022 மாலை வடபழனியிலுள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் திரு.இராதா கிருஷ்ணன், பொதுச்செயலாளர் திரு.செந்தில்குமார் ராமராஜ், பொருளாளர் திரு.இராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்தினர்.
இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் மூத்த ஆலோசகரும், தொழிலதிபருமான திரு.முத்துச்சாமி, திரு.வெங்கடேஷ், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை துணைத்தலைவர் திரு.சரவணன், திரு.மனோகரன் ஆகியோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக கடந்த 20.03.2022-அன்று இராசிபுரத்தில் நடைபெற்ற திருமணவிழாவில் நாமக்கல் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, மூத்த வழக்கறிஞர் நாமக்கல் திரு.பழனிச்சாமி, பிடிஓ நாகப்பன், விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், சத்தியமங்கலம் திரு.பவுல்ராஜ் உள்ளிட்ட சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழக்கிற்கு வழக்காடு நிதியாக ரூ.10000/- வழங்கிய மணமகளும், Petro 6 நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ஜனனி நாகஜோதி B.Tech., MBA., யின் சேவையைப் பாராட்டி மணமக்களை வாழ்த்தினர்.