கே.டி.மோகன்ராஜ் இல்லத்திருமண வரவேற்பு விழா
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் இல்லத்திருமண வரவேற்பு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை பொள்ளாச்சி - உடுமலை சாலையில் அமைந்துள்ள தங்கசரஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, மறுநாள் திங்கள்கிழமை காலை 6-7 சுபமுகூர்த்த வேலையில், பொள்ளாச்சி இராமபட்டிணம் ஜமீன்தார் விஷ்ணுகாந்த சக்திவேல் அவர்களின் தலைமையில் நடைபெறும் திருமண விழாவில், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் மணமக்கள் செல்வன் செ.அன்பரசன் B.E., M.B.A., செல்வி.மோ.ஷாலினி B.E., ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைக்கின்றார்.
இல்லறவாழ்வில் அடியெடுத்து வைக்கும் இணையர்க்கு சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.இராமராஜ், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ஈச்சனாரி சிவக்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.